வெப்பத்துடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் நிலவிவரும் வெப்பத்துடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும், புத்தளம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிக வெப்பத்துடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதன் காரணமாக குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

வெப்பமான வானிலையால், அதிக களைப்பு உள்ளிட்ட உடலியலில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதால், போதுமான அளவு நீரை பருகுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கோரியுள்ளது.

Related posts