வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் சடலமாக மீட்பு வெருகல் முட்டுச்சந்து பகுதியில் சம்பவம்

கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வெருகல் பகுதியில் வைத்து வெள்ள நீரினால் அடித்துச் செல்லப்பட்ட 30 வயது நிரம்பிய குடும்பஸ்தர் இன்று 11 சடலமாக பிரதேசவாசிகளினால் மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து வாகரை பொலீஸாரிடம் வினவியபோது சடலமாக மீட்கப்பட்ட நபர் தனபாலசிங்கம் கதீஸ்வரன் வயது 30 ஒரு பிள்ளையின் தந்தை இவர் வாகரை புளியங்கண்டலடி பகுதியில் வசிப்பவர் திருமணம் முடித்து வெருகல் பிரதேசத்தில் கூலித்தொழில் செய்து வாழ்ந்து வருபவர் கடந்த 08 ஆம் திகதி வெருகலில் உள்ள தனது மனைவியின் வீட்டிலிருந்து உறவினர் வீட்டிற்கு சென்ற வேளையில் வெள்ள நீரினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

கடந்த 8 திகதியிருந்து தேடப்பட்டுவந்த குறித்த நபர் இன்று வெருகல் முட்டுச்சந்து பகுதியில் வைத்து சடலமாக மீட்கப்பட்டிள்ளார் என வாகரைப் பொலீஸார் தமது முதற்கட்ட விசாரணையின் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts