வெள்ளியன்று ஆன்மீக கலாச்சார நடைபவனியும் பாற்குட பவனியும் !

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மடத்தடி ஸ்ரீமீனாட்சி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகத்தை அடுத்து நாளை (29) வெள்ளிக்கிழமை ஆன்மீக கலாச்சார பவனியும் பால்குட பவனியும் இடம்பெற இருக்கின்றது.
 
 நாளை 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை கல்முனை காரைதீவு அட்டப்பள்ளம் மற்றும் திருக்கோவில் அக்கரைப்பற்று பகுதிகளிலிருந்து புறப்பட இருக்கின்ற ஆன்மீக கலாச்சார நடைபவனி எட்டு மணி அளவில் மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தை வந்தடைய இருக்கின்றன.
 
 ஆலயத்தின் மேற்கு கும்பாபிஷேக மன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்க பீடத்தில் பவனிக்கான பால் வழங்கப்பட்டு அங்கிருந்து வயல்வெளி ஊடாக பால்குட பவனி இடம்பெறும் .
 
பால்குட பவனியில் பங்கேற்பவர்கள் குடத்துடன் வருகை தரவேண்டும். அவர்களுக்கான பால் சிவலிங்க பீடத்தில் வைத்து வழங்கப்படும். அங்கிருந்து ஊர்வலம் ஆனது நேராக ஆலயத்தை வந்தடையும்.
 
 ஆலயத்தில் 10 மணிக்கு அம்மனுக்கு பால் சொரிந்தலுடன் விசேட பூஜையும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஷ்வர குருக்கள் முன்னிலையில் இடம்பெறும் .
 
இந்த பால்குட சொரிதல் நிகழ்வை அடுத்து காலை பத்து முப்பது மணி அளவில் ஆலயத் தலைவர் கி. ஜெயஸ்சிறில் தலைமையில் பணி நயப்பு விழா இடம்பெற இருக்கின்றது.
 அதேவேளை எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை சங்காபிஷேக நிகழ்வும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஆலய பரிபாலன சபை செயலாளர் தா. சண்முகநாதன் தெரிவித்தார்.
 
 
 
 
 
 

Related posts