’​வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்துவதில் சிக்கலில்லை’

இலங்கையால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்துவதில் சிக்கலில்லை என்று, நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையானது, கடனைச் செலுத்துவதிலிருந்து ஒருபோதும் தவிர்ந்திருக்கவில்லை என்றும் இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்து, எதிர்வரும் 2019ஆம் ஆண்டில் செலுத்தப்படவேண்டிய கடனைச் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் பதவியை, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts