சார்வரி’ சித்திரைப்புத்தாண்டையொட்டி கொனாராநெருக்கடிக்காலகட்டத்தில் துன்பத்துக்குள்ளான அம்பாறை மாவட்ட நாவிதன்வெளிப்பிரதேசத்திலுள்ள மிகவும் பின்தங்கிய மத்தியமுகாம் 3 ஆம் மற்றும் 6ஆம் கிராம பெண்கள்தலைமைதாங்கும்  விதவைகளுக்கு சுவிஸ் ‘அன்பேசிவம்’ அமைப்பின் ஏற்பாட்டில் 100 உலருணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
 
மத்தியமுகாம் பெண்கள் தலைமைதாங்ககும் மற்றும் சிறுநீரகநோயாளிகளுக்குமான   உதவிகள்  நேற்று-13- திங்கட்கிழமை ஒருதொகுதி உலருணவு 150 நிவாரணப்பொதிகள்   நாவிதன்வெளிப்பிரதேச செயலாளர்  எஸ்.ரங்கநாதன்   முன்னிலையில் வழங்கிவைக்கப்பட்டன.
 
சுவிஸ் சூரிச் ஆதிசிவனாலயத்தின் தமிழ்ச்சங்கத்தின்  அன்பே சிவம் என்ற அமைப்பினர் கொரோனா நெருக்கடிக்குள்ளான மக்களுக்கு உலருணவு நிவாரணம் வழங்கும் உதவியை அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் யாழ்.பல்கலைக்கழகமாணவன் இளம்விஞ்ஞானி சோ.வினோஜ்குமாரின் ஏற்பாட்டில் வழங்கிவைத்தது.
 
நிகழ்வில் நாவிதன்வெளி  பிரதேசசெயலாளர் எஸ்.ரங்கநாதன்   சமுகசெயற்பாட்டாளர்  கே.ஜெயசிறில் அமைப்பின் ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா அன்பேசிவம் அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஆசிரியர் என்.ரவிந்திரன்   கோரக்கர் பிள்ளையார் ஆலயத்தலைவர்  எஸ்.மோகன்   கோரக்கர்கிராம பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் சோ.  தினேஸ்குமார் மற்றும்  கிராமசேவையாளர்  திட்டஉத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் நிவாரணப்பொதிகளை வழங்கிவைத்தனர்.
 
ஏலவே கல்விமற்றும் சமுக செயற்பாட்டாளர் இணைப்பாளர் சோ. வினோஜ் கு மாரின் ஏற்பாட்டில் லண்டன் சைவமுன்னேற்றச்சங்கம் சுவிஸ் சூரிச் ‘அன்பேசிவம்’ பிரிட்டன் ‘சிவகாமி அறக்கட்டளை நிதியம்’ போன்ற அமைப்புகளால் அம்பாறை மாவட்டத்திலுள்ள  வளத்தாப்பிட்டி பளவெளி அட்டப்பள்ளம் காரைதீவு வீரச்சோலை மண்’டானை காயத்ரிகிராமம் ஆகிய பகுதிகளில் உலருணவு நிவாரணம் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts