7 ஆம் கிராமம் நாமகள் வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு

சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட 7 ஆம் கிராமம் நாமகள் வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு 11 ஆம் திகதி புதன்கிழமை அதிபர் சா.நடனசபேசன் தலைமையில் இடம்பெற்றது.

இவ் விழாவானது பெற்றோர்களின் முழுப் பங்களிப்புடன் நடைபெற்றதுடன் ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் அதிதிகளாக பாவாணர் அக்கரைப்பாக்கியன்,ஓய்வுநிலை அதிபர் சீ.பாலசிங்கன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அதேவேளை ஆசிரியர்களுக்கு இடையில் போட்டிநிகழ்வுகள் நடாத்தப்பட்டு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts