7500 குடும்பங்களுக்கு பொதுஜன பெரமுன கட்சியின் மட்டு மாவட்ட அமைப்பாளர் ப. சந்திரகுமாரினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

மட்டு மாவட்டத்தில் சுயதொழில் இழந்த 7500 குடும்பங்களுக்கு பொதுஜன பெரமுன கட்சியின் மட்டு மாவட்ட அமைப்பாளர் ப. சந்திரகுமாரினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு
 
 
பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களுக்கான அபிவிருத்திக்குழுவின்  பிரதித் தலைவருமான பரசிவம் சந்திரகுமார் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுயதொழில் வாய்ப்புக்களை இழந்த சுமார் 7500 குடும்பங்களுக்கு பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.
 
மட்டு மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் வறுமைக்கோட்டீன் கீழ் வாழுகின்ற மக்களின் தேவை கருதி அமைப்பாளரின் பரிந்துரைக்கு அமைவாக குறித்த உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts