அட்டப்பளத்தில் வெகுசிறப்பாக நடைபெற்ற தெய்வீக கிராம நிகழ்வு

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், நிந்தவூர் பிரதேசசெயலகம்  இணைந்து நடாத்தும் தெய்வீக கிராம நிகழ்வானது கடந்த  ஞாயிற்றுக்கிழமை அட்டப்பளம் ஶ்ரீ சிங்காரபுரமாரியம்மன் ஆலயம் விநாயகர் அறநெறிப்பாடசாலையில்  இடம் பெற்றது.
 
 திருமுன்னிலை அதிதியாக  சிவஶ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள்  முன்னிலையில்   நிந்தவூர் பிரதேசசெயலாளர் ஜனாப்.எ.எம் அப்துல் லத்தீப் தலைமையில் தெய்வீக கிராம நிகழ்வானது இடம்பெற்றது.
 
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பதில் அரசாங்க அதிபர் வே.ஜெகதீஸன் கலந்துகொண்டதுடன் ,ஆன்மீக அதிதிகளாக சிவஶ்ரீ சாந்தரூபன் குருக்கள் சிவஶ்ரீ பத்மலோஜன் சர்மா சிவஶ்ரீ ஜாதகன் சர்மா பூசகர்  வே.தயாலன் கலந்துகொண்டனர்.
 
காவடிஆட்டம் உள்ளிட்ட இந்துகலாசாரமுறைப்படி அதிதிகள் வரவேற்கப்பட்டதுடன், கோமாதாபூஜை ,புனிதமரம்நடல், பிடியரிசி சேமிக்கும் நிகழ்வு ,வஸ்திரதானம் வழங்கல், ஆசீhவாதம் பெறுதல் ,அறநெறிவாசிகசாலை திறத்தல், அன்னதானம் வழங்கல்வரை இடம்பெற்றது.
 
சிறப்பு அதிதிகளாக  வே.வாமதேவன் சிவனருள் பவுண்டேசன் செயலாளர் திரு ச.ரகுநாதன் கமு விநாயகர் வித்தியாலய அதிபர் அட்டப்பளம் சிங்காரபுரமாரியம்மன் ஆலய தலைவர்  ரி.கோபாலன் சித்திவிநாயகர்  அறநெறிப்பாடசாலை பொறுப்பாசிரியர் செ.த.ஜெயக்குமார்  நிந்தவூர் ஶ்ரீசீங்காரபுரமாரியம்மன்’ அறநெறிப்பாடசாலை  தலைவர் எஸ் பிரபாகரன் பொறுப்பாசிரியர் திருமதி எஸ். ஜிவிதா அட்டப்பளம் ஶ்ரீ சித்திவிநாயகர் தலைவர்   வ.சந்திரன் ஶ்ரீ முருகன் ஆலய தலைவர்   மு. இராமச்சந்திரன் மற்றும் பொது அமைப்புக்கள் ஆலய பிரதிநிதிகள் சமூக அமைப்புக்கள் மாதர்சங்கங்கள்  நிருவாகிகள் கிராம உத்தியோகத்தர் சமுர்த்தி உத்தியோகத்தர் இந்து கலாசார உத்தியோகத்தர்கள் கலாசார உத்தியோகத்தர்கள் பெற்றோர்கள் அறநெறிப்பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related posts