இலங்கை கிரிக்கட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து

தென்னாபிரிக்காவுக்கு எதிராக, அந்நாட்டில் இடம்பெற்ற போட்டியில் 2க்கு 0 என்ற வகையில் டெஸ்ட் தொடரை வெற்றி பெற்றுச் சாதனை படைத்திருக்கும் முதலாவது ஆசிய நாடாக, இலங்கை தெரிவாகியிருப்பதையிட்டு, இலங்கை கிரிக்கெட் அணிக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துக் கூறியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தை படைத்துள்ள இந்த முக்கியமான அடைவு குறித்து, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன உள்ளிட்ட அணி வீரர்களுக்கு, ஜனாதிபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் புதிய உத்வேகத்துடன் முன்னோக்கி பயணித்து, தாய் நாட்டுக்காக இதுபோன்ற இன்னும் பல வெற்றிகளை பெறுவதற்கு சக்தியும், தைரியமும் கிடைக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி ஆசீர்வதித்துள்ளார்.

Related posts