இவ்வாண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசை 3 விஞ்ஞானிகள் பெறுகிறார்கள்

 இவ்வாண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசை 3 விஞ்ஞானிகள் பெறுகிறார்கள்.உலகளவில் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு நோபல் பரிசுவழங்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நேற்றிலிருந்து (04) வருகிற 11 ஆம் திகதி வரை அறிவிக்கப்படுகிறது.அந்த வகையில், 2021 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறுபவர்கள்  குறித்து  (05) அறிவிக்கப்பட்டது.இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. சியுகுரோ மனாபே (அமெரிக்கா), கிளாஸ் ஹாசில்மேன் (ஜேர்மனி) மற்றும் ஜார்ஜியோ பாரிசி (இத்தாலி) ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது

Related posts