ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் வே.மகேஸ்வரன் கட்சியில் இருந்து விலகல்

ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் வே.மகேஸ்வரன், தனது சுயவிருப்பம் காரணமாக, கட்சியில் இருந்து விலகிக்கொள்வதாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இத்தகவலை அறிவித்தார்.
 

மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள அவரது வீட்டில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு அறிவித்தார்.

இந்தப் பதவி விலகலை, கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசத்துக்கு கடிதம் மூலம் அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பல முரண்பாடுகள் இருப்பதால், அதில்  தொடர்ந்தும் செயற்பட முடியாதிருப்பதால், மேற்படி பதவியிலிருந்து விலகிக்கொள்வதாகத் தெரிவித்தார். 

அதேவேளை, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில்  எந்தவொரு கட்சிக்கும் தான் ஆதரவு வழங்கப் போவதில்லை என்பதுடன், எந்தவோர் அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடபோவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

Related posts