கணவன்,மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டுக்கு தீயிட்டு எரிப்பு மண்டூரில் சம்பவம்

கணவன்,மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டுக்கு தீயிட்டு எரிப்புமண்டூரில் சம்பவம்
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் பாலமுனை பிரதேசத்தில் கணவன்,மனைவிற்கிடையில் ஏற்பட்ட தகராற்றினால் கணவன் தனது வீட்டுக்கு தீயிட்டு எரித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்
குறித்த பிரதேசத்தில் உள்ள வீட்டில் கணவன்,மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராற்றினால் ஆத்திரமைடைந்த கணவன் அவரின் மனைவி உறவினர் வீட்டுக்கு சென்ற பின்னர் தனது வீட்டுக்கு தீயிட்டு எரித்துள்ளார். அதனை கண்ட அயலவர்கள் பொலிஸாருக்கு சம்பவம் பற்றி தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் வீடு முற்றாக எரிந்த நிலையில் தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்திருந்தனர்.
அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தலைமறைவாகிய நிலையில்  பொலிஸார் அவரை தேடிவருவதாகவும் அதேவேளை சம்பவ இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு மாவட்ட தடயவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி கே.ரவீந்திரன் தலைமையிலான குழுவினரும் மற்றும் வெல்லாவெளி பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பிரசாத்வண்டார,கேரத் தலைமையிலான குழுவினரும் நிலையப்பொறுப்பதிகரி டயஸ் ஆகியோர் மேலதிக விசாரணைகளை மேற்கொணடு வருகின்றனர்

.


Related posts