கதிர்காமத்தில் காணமல் போன மட்டக்களப்பை சேர்ந்த இளைஞர் !

கதிர்காம யாத்திரைக்கு சென்ற இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் வசிக்கும் 28 வயதுடைய இளைஞர், தனது தயாருடன், கதிர்காம பாதயாத்திரை சென்ற போது, காணாமற்போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதுடன், இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 0756775539 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

Related posts