காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு .

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள குசலான மலையடிவாரத்தில் வைத்து குடும்பஸ்தரான ஆணொருவர் மீது காட்டு யானை தாக்கியதில் அவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று புதன்கிழமை (03.07.2019)அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாலர்சேனை, வேப்பவெட்டுவானைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சைமன் சில்வா தயானந்த (வயது 55) என்ற தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவ தினமான இன்று இவர் வழமைபோன்று மாடுகளைப் பராமரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது காட்டுப் பகுதிக்குள் இருந்து திடீரென தோன்றிய காட்டு யானை இவரைத் தாக்கியதல் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற் கூற்றாய்வுப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்த பொலிஸார் இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts