வரட்சியால் 4,59,267 ​பேர் பாதிப்பு

நாடு முழுவதிலுமுள்ள 17 பிரதேச செயலகப் பிரிவுகளில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக, 1,26,520 குடும்பங்களைச் சேர்ந்த 4,56,267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 8 பிரதேச செயலகப் பிரிவுகளில் 23,518 குடும்பங்களைச் சேர்ந்த 77,633 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த வரட்சியால், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் பயிர் செய்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts