கிழக்கு மாகாண சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் வட மாகாண முதயமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனை சந்திப்பு

கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரச்சனைகள் மற்றும் கிழக்கின் அபிவிருத்திகள் தொடர்பான விடயங்கள் கலந்தாலோசிக்கும் வகையில் கிழக்கு மாகாண சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சற்று முன்னர் வட மாகாண முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமான சீ.வி விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இச்சந்திப்பின் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் ரீ.வசந்தராஜா முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் என்.கிருஸ்ணபிள்ளை கல்முனை மாநகர சபையின் உப தவிசாளர் காத்தமுத்து கணேஸ் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் பேரவையின் ஆரம்ப கால உறுப்பினருமான எஸ். சோமசுந்தரம் திருமலை மாவட்டத்தின் சார்பாக சகாயநாதன் கிசோ ஆகியோர் அடங்களாக பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திகள் சமகால அரசியல் நடவடிக்கைகள் சிவில் அமைப்புக்களின் பங்களிப்புக்கள்  எதிர்காலத்தில் அரசியல் பயணம் சீ.வி விக்னேஸ்வரன் தலைமையிலான அரசியல் பங்கேற்பு அதற்கான மக்களின் அபிப்பிராயங்கள் தொடர்பான பல விடங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts