குழந்தை பிரசவித்த பாடசாலை மாணவி!

பாடசாலையில் திடீரென சுகயீனமுற்ற 13 வயதான மாணவியொருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, எட்டு மாத கர்ப்பிணி எனத் தெரியவந்துள்ளதாக, தங்காலை பொது மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரன்ன பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் 8 ஆம் தரத்தில் கல்விக் கற்கும் மாணவியே, இவ்வாறு சுகயீனமுற்றுள்ளார்.

பாடசாலை ஆசிரியர்கள் மாணவியின் வீட்டாருக்கு அறிவித்ததையடுத்து, அவரது சிறியதாய் பாடசாலைக்கு வருகைத்தந்து மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் மருத்துவர்கள் மாணவியை சோதனை செய்த போது, அவர் 8 மாத கர்ப்பிணி என்பது தெரியவந்துள்ளது.

மாணவியின் அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு மருத்துவர்கள், அறுவைச்சிகிச்சை மேற்கொண்டு குழந்தையை காப்பாற்றியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் மருத்துவமனை அதிகாரிகள் காவல்துறைக்கு அறிவித்துள்ளனர்.

மாணவி தற்போது குணமடைந்து வரும் நிலையில், குழந்தை சிகிச்சையின் பொருட்டு அம்பாந்தோட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், மாணவியின் மாமாவான 55 வயதுடைய நபரை கைது செய்துள்ளனர்.

Related posts