சர்வதேச காணாமலாக்கப்பட்டோர்கள் தின கவண ஈர்ப்புப் போராட்டம் அம்பாறை திருக்கோவிலில்

“காணாமல் ஆக்கப்படுவதற்கு இடமளியோம்” என்ற தொனிப்பொருளில் சர்வதேச காணாமலாக்கப்பட்டோர்கள் தின கவண ஈர்ப்புப் போராட்டம் அம்பாறை திருக்கோவில் பகுதியில் அனுஸ்டிக்கப்பட்டது.
இதன் போது பேரணியானது திருக்கோவில் தபாலகத்திற்கு முன்பாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர்கள் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு மணிக்கூட்டுக் கோபுரத்தை சென்றடைந்தது எதிர்ப்பும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இப்போராட்டத்தில் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களின் வலிந்து காணாமலாக்கப்பட்டோர்கள் சங்கத்தின் தலைவிகள் உறுப்பினர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
எங்கள் உறவுகளின் உண்மை நிலை தெரியும் வரை சர்வதேசமே சர்வதேச நாடுகளே எம்மை கண் திறந்து பாருங்கள், இலங்கை அரசாங்கத்தின் மூலமாக எமக்கு எந்த நீதியும் கிடைக்கப் போவதில்லை சர்வதேசமே எமக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும் , சுவீஸ் அரசாங்கத்தின் மூலமாகவே எமது காணாமல் போன உறவுகளுக்கு நியாயம் கிடைக்கும் என பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிட்டிருந்தது.

Related posts