சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் நிருவாகசபைக் கூட்டம்

சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் நிருவாகசபைக் கூட்டம் சுவிஸ் நாட்டில் சுவிஸ் உதயத்தின் அலுவலகத்தில்; சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் தலைவர் டி.எல். சுதர்சன் அவர்களது தலைமையில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது

2022 ஆம் ஆண்டு சுவிஸ் உதயம் அமைப்பினால் இலங்கையில் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் அதற்கான செலவுதொடர்பான விபரம் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் அவர்களால் முன்வைக்கப்பட்டது.

அதே வேளை இவ்வருடம் 2023 இல் மேற்கொள்ளவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு இறுதிமுடிவு எடுக்கப்பட்டன அத்தோடு இலங்கையில் அமைக்கப்படுகின்ற சுவிஸ் உதயம் அமைப்பினது அலுவலகம் பெப்ரவரி மாதம் இறுதிப்பகுதியில் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்க இருப்பதாக முடிவு எடுக்கப்பட்டதுடன் இந்நிகழ்வுக்கு வருகைதரவுள்ள உறுப்பினர்கள் செயலாளர் அம்பலவாணர் ராஜன் அவர்களுடன் தொடர்புகொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை இம்மாதம் 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊரும் உறவும் பொங்கல் விழா நடைபெற இருப்பதனால் இதற்கு அனைத்து உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது

இக்கூட்டத்திற்கு செயலாளர் அம்பலவாணர் ராஜன் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் உபசெயலாளர் சுபாஸ்கோ உபதலைவர் கா.தியாகராஜா  உதவிப்பொருளாளர் வி.பேரின்பராஜா மற்றும் நிருவாக உறுப்பினர்களான கே.பாலேந்திரன் எஸ்.பரமேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Related posts