தமிழ்தேசிய கூட்டமைப்பு கேட்பதைவிட தமிழ்மக்கள் கேட்கும் விடயங்களையும்,அபிலாஷைகளையும் தங்குதடையின்றி ஜனாதிபதி கோத்தபாய நிறைவேற்றிக்கொடுப்பார்

தமிழ்தேசிய கூட்டமைப்பு கேட்பதைவிட தமிழ்மக்கள் கேட்கும் விடயங்களையும்,அபிலாஷைகளையும் தங்குதடையின்றி ஜனாதிபதி கோத்தபாய நிறைவேற்றிக்கொடுப்பார் என மட்டக்களப்பு மாவட்ட பொது ஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட பொதுஜன பெரமுன கட்சியின் மக்கள் சந்திப்பு நிகழ்வு(9) காலை 10.00.மணியளவில் மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்றது.இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது;கிழக்கு மாகாண தமிழர்களை ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்து ஏமாற்றியே வருகிறது.கிழக்கு தமிழர்களை அவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே பார்க்கின்றனர்.ஒவ்வொரு தீபாவளிக்கும் தீர்வு தருவதாக கூறி கூறி தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஏமாற்றிய ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் காலத்தை இழுத்தடித்ததே தவிர தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஜக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் நிறைய செய்துள்ளது.ஒவ்வொரு வரவு செலவு திட்டத்திற்கும் கை உயர்த்துவதற்கும் அரசாங்கத்தை பாதுகாப்பதற்கும் ரணில் விக்கிரமசிங்க அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு நிறைய செய்துள்ளார். ஆனால் தமிழ் மக்களுக்கு ஜக்கிய தேசியக் கட்சி எதனையும் செய்யவில்லை.

குறிப்பாக கிழக்கு தமிழர்களை ஜக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் ஏமாற்றியே வருகிறது. வடக்கு அபிவிருத்தி அமைச்சு ஒன்றை உருவாக்கிய ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் கிழக்கு அபிவிருத்தி அமைச்சர் ஒன்றை உருவாக்க மறுத்துவிட்டது.காரணம் முஸ்லிம் அமைச்சர்கள் கோபித்து விடுவார்கள் என்ற பயம் ஆனால் முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான எங்களது மகிந்த ராஜபக்ச ஐயா அவர்கள் அவரது ஆட்சிக்காலத்தில் கிழக்கிற்கு தமிழ் முதலமைச்சர் ஒருவரை தற்துணிவுடன் நியமித்தார். அதே போன்று கடைசியாக உருவாகிய இடைக்கால அரசில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவையில் கிழக்கு அபிவிருத்தி அமைச்சு ஒன்றை உருவாக்கி அதனை பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரனுக்கு வழங்கியிருந்தார்.இவ்வாறு கிழக்கு தமிழ் மக்களுக்கு துணிந்து ஆட்சி அதிகாரத்தை வழங்க கூடிய ஒரே தலைவர் மகிந்த ராஜபக்ச   தலைமையிலான ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவே ஆகும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்று ஜனாதிபதியாக வந்திருந்தால் கிழக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சையும்,ஆளுநர் பதவியையும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் கைப்பற்றி நில,நிருவாக,இருப்புக்களை கைப்பற்றி இருந்திருப்பார்கள்.அத்துடன் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியகட்சி அரசாங்கம் சுமார் 30 முஸ்லிம் அரசியல் பிரமுகர்களுக்கு அமைச்சுப் பதவியை கொடுத்திருப்பார்கள்.இதனால் கிழக்குத் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாகியிருக்கும்.கிழக்குத் தமிழர்களின் இருப்பை இல்லாமல் செய்வதே தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒரே எண்ணமாகும்.கிழக்குத் தமிழர்களின் இருப்பை பாதுகாத்து தமிழர்களுக்குரிய அபிலாஷைகளையும்,அபிவிருத்தியையும் தமிழ்மக்களுக்கு வழங்குவதே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் எண்ணமாகும்.கோத்தாபாய ராஜபக்ஷவின் ஆட்சியில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்.தமிழ்மக்கள் கோத்தபாய ராஜபக்ஷவை நம்பி விசுவாசமாகவும்,நம்பிக்கையாகவும் செயற்படலாம்.தமிழ்தேசிய கூட்டமைப்பு கேட்பதைவிட தமிழ்மக்கள் கேட்கும் விடயங்களையும்,அபிலாஷைகளையும் தங்குதடையின்றி ஜனாதிபதி கோத்தபாய நிறைவேற்றிக்கொடுப்பார்.சம்பந்தனோ சுமந்திரனோ அல்லது மாவையோ தமிழ்மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்க முடியாத தலைவர்கள்.சுயநல அரசியல் செயற்பாடுகளை தவிர தமிழ்மக்களின் அடிப்படைத்தேவைகள்,நியாயபூர்வமான அபிலாஷைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்காமல் தமிழர்களை அதாலபாதாளத்தில் போட்டவர்கள்.இவர்களை புத்திக்கூர்மையுள்ள தமிழர்கள் நிராகரித்துள்ளார்கள்.இன்னும் தமிழர்கள் ஏமாந்து தமிழ்தேசிய கூட்டமைப்பின் பின்னாள் போனால் இருப்பைத் தொலைத்து சோமாலியர்கள் போன்று வாழவேண்டி வரும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் 50,000 மேற்பட்ட பொதுமக்கள்,இளைஞர்கள்,யுவதிகள்,புத்திஜீவிகள் உறுப்புரிமையை பெற்ருக்கின்றார்கள்.இவர்கள் அனைவரும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் ஒருவரை பாராளுமன்றம் அனுப்பி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப்பதவியை பெற்று மாவட்டத்தை அபிவிருத்தியில் முன்னேற்றுவோம்.தமிழ்மக்களின் அடிப்படைத்தேவைகளை ஜனாதிபதி  நிவர்த்தி செய்துகொடுப்பார்.எனவே கிழக்கு தமிழ் மக்கள் இம்முறை சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரச்சாரம் செய்வது போன்று யுத்தகாலத்தில் நடந்த சம்பவங்கள் போன்று இனி ஒருபோதும் நடைபெறாது. பழைய கதைகளை கூறிக் கூறியே தமிழ் மக்களின் வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக் கொடுத்தது அதனால் கட்சி இலாபம் அடைந்ததே தவிர தமிழ் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை இம்முறையும் பழைய கதைகளை கூறி உணர்ச்சி அரசியலை செய்யவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு முயற்சி செய்கிறது.அதற்கு தமிழ் மக்கள் இடம் கொடுக்க கூடாது. குறிப்பாக கிழக்கு தமிழ் மக்கள் பாதுகாக்க படவேண்டும் என்றால் தமிழ் மக்கள் பொது ஜன பெரமுன கட்சி ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ச அவர்களை வெற்றிபெற செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

Related posts