தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா மாவட்ட பணிமனை அங்குரார்ப்பண நிகழ்விற்கு அழைப்பு விடுக்கின்றார் கட்சியின் இணைப்பாளர் செல்லத்தம்பி ஶ்ரீதரன்

(டினேஸ்)
 
தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா மாவட்ட பணிமனை அங்குரார்ப்பண நிகழ்விற்கு அழைப்பு விடுக்கின்றார் கட்சியின் இணைப்பாளர் செல்லத்தம்பி ஶ்ரீதரன்
 
 
 
எதிர்வரும் 11.08.2019 ஆம் திகதி மன்னார் வீதி நான்காம் கட்டை வவுனியாவில் நடைபெறவுள்ள கட்சிப்பணிமனை அங்குரார்ப்பண நிகழ்வு தொடர்பாக இன்று 09 திகதி  ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
 
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்.
 
எமது கட்சியின் அரசியல் பயணமானது மிகப்பரந்துபட்ட விதத்தில் வட கிழக்கு மாவட்டங்களில் அண்மைக்காலமாக மக்கள் சந்திப்புக்கள் நடைபெற்று வருகின்றன அந்தவகையில் தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா மாவட்ட பணிமனை கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நீதியரசரும் வடமாகாணசபை முதலமைச்சருமான சீ.வீ விக்னேஸ்வரன் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளது.
 
இந்நிகழ்வில் இளைஞர்கள் யுவதிகள் கட்சி ஆதரவாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள் நலன்விரும்பிகள் என பலரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுக்கின்றோம் அத்துடன் தற்காலத்தில் இளைஞர்கள் மத்தியில் உள்ள போதைப்பொருள் பாவனைகள் சமூக ஒழுக்க சீர்கேடுகள்     விளையாட்டின் மூலமாக ஒரு நிலைப்படுத்த முடியும் அதனடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் உள்ள விளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மென்பந்து வெற்றிக்கிண்ணம் ஒன்றுனை எதிர்வரும் 11.08.2019 ஆம் திகதி கற்பகபுரம் நீயுவண் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இப்போட்டியின் போது 35 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றவுள்ள நிலையில் போட்டிகள் நான்கு மைதானங்களில் நடைபெறவுள்ளதுடன் இப்போட்டிகள் ஓர் நட்புறவையும் ஒழுக்க விழுமியங்களை கடைப்பிடிக்கும் வகையில் நடைபெறவுள்ளது அதிலும் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுக்கின்றோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் செல்லத்தம்பி ஶ்ரீதரன் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts