தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள்

காரைதீவு அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் சமூக சேவை அமைப்பின் (KDPS) கல்வி மேன்பாட்டுத்திட்டத்தின் கீழ் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் வழங்கும் நிகழ்வின் முதற்கட்ட நிகழ்வானது  KDPS அமைப்பின் தலைவர் எந்திரி இராஜமோகன் அவர்களின் பங்குபற்றலிலும், திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் தலைமையிலும் திருக்கோயில் கல்விப் பணிமனையில் இன்று இடம்பெற்றது. திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட37 பாடசாலைகளின்  தரம் 05 இல் கல்வி பயிலும் சுமார் 1100 மாணவர்களுக்கான  வினாத்தாள்கள் வழங்கிவைக்கப்பட்டன.
 
இவ் வினாத்தாள்கள் வலயத்தின் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டன. மேலும் இந்நிகழ்வை ஏற்பாடு செய்து வழிநடத்திய வலயக்கல்விப் பணிமனையின் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் KDPS சார்பான நன்றிகள்.

Related posts