திருகோணமலையில் ஐவர் கைது

திருகோணமலை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பி​டி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மீனவர்கள் ஐவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (12) கடற்படையினர் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போதே, குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக, கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
அத்துடன் குறித்த ஐவரும் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்திய இயந்திரப் படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts