படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி-சத்தியமூர்த்தியின் 12வது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பு மட்டு.ஊடக அமையத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சியில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளரும்,நாட்டுப்பற்றாளருமான  புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தியின் 12வது ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை(12)காலை 10.00மணிக்கு மட்டு.ஊடக அமையத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் ஊடகத்துறை தொழில்சார் ஊடகவியலாளர் சம்மேளனம் போன்ற ஊடக அமைப்புக்களின் ஏற்பாட்டில்
மட்டக்களப்பு மட்டு.ஊடக அமையத்தில் இடம்பெற்றது.

இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு,ஈகைச்சுரேற்றப்பட்டு,மலர்தூவி
இரண்டு நிமிடம் அகவணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன்,சிரேஸ்ட ஊடகவியலாளரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான சிவம் பாக்கியநாதன்,மற்றும் ஊடகவியலாளர்களர்கள் கலந்துகொண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related posts