பெரியகல்லாற்றில் விபத்து. 7பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.

உம்ரா தொழுகையை முடித்திட்டு வீடு திரும்பியவர்கள் பெரியகல்லாற்றில் விபத்து.7பேர் காயமடைந்துள்ளார்கள்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை(5.10.2018) அதிகாலை 2.15 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7பேர் காயமடைந்துள்ளார்கள்.

அம்பாறை மாவட்டம் மருதமுனை கிராமத்தை சேர்ந்தவர்கள் கடந்தமாதம் உம்ரா கடமை நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளார்கள்.அங்கு உம்ரா கடமையை சிறப்பாக மேற்கொண்டு வியாழக்கிழமை நாடு திரும்பியுள்ளார்கள்.நாடு திரும்பியவர்கள் தனது இருப்பிடமான மருதமுனைக்கு பயணிக்கும்போது பெரியகல்லாறு பிரதான வீதியில் வாகனத்திற்கு ஏற்பட்ட இடையூறு காரணமாக வாகனம் வேகத்தில் வீதியில் இருந்த மரத்தில் பலமாக அடிக்கப்பட்டுள்ளதால் இவ்விபத்து நடைபெற்றுள்ளது.

பொதுமக்களின் உதவியுடன் வாகனத்தின் கதவுகளை உடைத்துதான் காயப்பட்டவர்களை மீட்டெடுத்துள்ளார்கள்.3குழந்தைகள் உட்பட 7பேர் இவ்விபத்தில் காயமடைந்துள்ளார்கள்.இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் பெரியகல்லாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதுசம்பந்தமாக களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Related posts