மத்தியமுகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் பைசிக்கல் இனந்தெரியாதோரால் தீக்கிரை

அம்பாரை மத்தியமுகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 11ம் கிராமம் 3ம் வட்டாத்தில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நடராசா பரஞ்சோதி ஆசிரியர் என்பவருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள் இன்று (09) நள்ளிரவு ஒரு மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. 
இவ்விடயம் பற்றி மேலும் தெரியவருவதாவதுஇ 15ம் கிராமத்தில் திருமணம் செய்துள்ள ஆசிரியரான நடராசா பரஞ்சோதி என்பவர் நேற்று மாலை 7.00 மணியளவில்இ 11ம் கிராமம் 3ம் வட்டாரத்திலுள்ள தனது தாயின் வீட்டுக்கு வந்துள்ளார். இதே நேரம் பலத்த இடி மின்னலுடன் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால்இ இரவு உணவை தனது தாயின் வீட்டிலேயே எடுத்து விட்டு அங்கேயே தூங்கியுள்ளார்.
இச்சந்தர்ப்பத்தில் இன்று (09) அதிகாலை ஒரு மணியளவில் மதிலால் ஏறிக்குதித்து வளவுக்குள் வந்த இனந்தெரியாத நபர்கள்இ மத்திய கிழக்கு நாடொன்றுக்கு வேலை வாய்ப்பிற்காகச் சென்றிருந்தஇ நடராசா என்பவரின் இளைய மகனான நடராசா திருவாகவன் என்பரை தேடிவந்திருப்பதாகவும்இ அவர் வீட்டில் உள்ளே இருக்கின்றார். அவரை வெளியில் அனுப்புமாறும் கூறியுள்ளனர். இதனால் உள்ளே இருந்த ஆசிரியர் பரஞ்சோதி மற்றும் அவருடைய தாய்இ தங்கை ஆகியோர் அச்சம் காரணமாக கதவைத் திறக்கவில்லை கதவு திறக்கப்படாமையினால் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆசிரியர் பரஞ்சோதியின் தீவைத்துவிட்டுச் சென்றுள்ளனர். பைசிக்கல் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது. மத்தியமுகாம் பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்தியமுகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் பைசிக்கல் இனந்தெரியாதோரால் தீக்கிரை

Related posts