மாணவர்கள் மத்தியில் மரம் நடுகைச் செய்திட்டத்தினை ஊக்குவிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடவடிக்கை

(சுமன்)

 
மாணவர்கள் மத்தியில் மரம் வளர்க்கும் செயற்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பழவகை மரங்கள் வழங்கும் செயற்திட்டம் அம்பாறையில் முன்னெடுக்கப்பட்டது.
 
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் பாராளுமன்ற உறப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரின் வழிகாட்டுதல் மற்றம் ஒத்துழைப்பின் கீழ் தமிழத் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அணித் தலைவர் ப.துசானந்தன் தலைமையில் பாண்டிருப்பு மகா வித்தியாலயம் மற்றும் பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மரக்கன்றகள் வழங்கி வைக்கப்பட்டன.
 
பாடசாலை அதிபர்களின் ஒத்துழைப்புடன் சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இவ்வாறு பழ மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பாடசாலை வளாகத்தினுள்ளும் மரக்கன்றுகள் நடும் செயற்திட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts