மின்னல் தாக்கி நபர் பலி

சுண்டிக்குளம் பிரதேசத்தில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றிருந்த நபரொருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று (30) மாலை குறித்த நபர் கடலுக்குச் சென்றிருந்த வேளையிலேயே, இவ்வாறு அனர்த்தம் நேர்ந்துள்ளது.

அனர்த்தத்துக்குள்ளான நபரை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, சிகிச்சை பலனின்றி, அவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் தர்மபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த, 46 வயதுடைய நபர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts