முச்சக்கர வண்டியில் மாட்டிறைச்சி கடத்தி சென்ற நபர் கைது

அனுமதி பத்திரமின்றி முச்சக்கர வண்டியில் மாட்டிறைச்சியை கடத்தி சென்ற நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை(30) காலை விசேட அதிரடிப்படையினா் யாழ் வடமராட்சியில் நடத்திய திடீா் சோதனையின் போதே குறித்த நபா் கைதானார்.
கைதான சந்தேக நபரிடம் இருந்து 60 கிலோ மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட நபரும் மாட்டிறைச்சியும் வல்வெட்டித்துறை பொலிஸாாிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related posts