வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கான விசேட செயலணியின் முதலாவது அமர்வு: விக்னேஸ்வரன் புறக்கணிப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணியின் முதலாவது அமர்வு (திங்கட்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில், அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், இராணுவத் தரப்பினர், அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த அமர்வில் பங்கேற்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு விடுக்கப்பட்ட அழைப்பினை, அவர் நிராகரித்து அமர்வில் பங்கேற்றவில்லை.

இது தொடர்பில் தாம் முன்னதாகவே, இரண்டு கடிதங்கள் மூலம் உரிய தரப்புக்கு அறிவித்துள்ளதாக விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

இந்த செயலணியின் 48 பிரதிநிதிகளில் 2 பேர் மாத்திரமே வடக்கை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், ஏனையோர் மத்திய அரசாங்கத்தையும் பாதுகாப்பு தரப்பையுமே பிரதிநிதித்துவப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts