வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரமாக ஜனவரி 21 தொடக்கம் 25 வரை பிரகடனப்படுத்தப்பட்டு போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் விழிப்புணர்வு செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது . 

போதைப்பொருள் ஒழிப்பு செயல்திட்டங்கள் பாடசாலை மட்டத்தில் நடைமுறைபடுத்தபட்டுள்ளது.

இதற்கமைய சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் 24 ஆம்திகதி வியாழக்கிழமை அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை கல்விவலயத்தின் ஆசிரிய வளநிலையத்தின் முகாமையாளர் கி.செல்வராசா மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA

Related posts